சோழிய வேளாளர் கங்கை குலம் கிடையாது
சோழநாட்டு சோழிய வேளாளர்கள் தங்களை எந்த காலத்திலும் கங்கை குலம் என்றோ கங்க வம்சம் என்றோ காராளர் என்றோ சொல்லிக்கொண்டதில்லை. சோழிய வேளாளர்கள் கங்கை குலம் கிடையாது. அப்படியிருக்க கங்கை குலம் காராளர் என சொல்லிக் கொள்ளும் கொங்கு வேளாளர்கள் சோழ நாட்டில் இருந்து குடியேறியவர்கள் என்று பரப்பப்படுகிறது. சோழராட்சியில் தொண்டமண்டலத்தில் இருந்து தான் வேளாளர்கள் குடியேறினர், அதனால் பொதுவாக சோழ நாடு என்று சொல்லல் ஆகாது. சோழர்கள் களப்பிரரை வீழ்த்தி செந்தலை எனும் சிற்றூரில் முடக்கினர். செந்தலை வேளாளர் தென்திசை வேளாளர் என்று எந்த காலத்திலும் சோழிய வேளாளர்கள் சொல்லிக் கொண்டதில்லை. களப்பிரர்கள் பல சாதிகளில் கலந்துவிட்டார்கள் ஈசநாட்டு கள்ளர் வல்லம்பர் முத்தரையர் வேட்டுவர் இடையர் என இத்தனை சாதிகளில் கலந்துவிட்டார்கள். மற்ற அனைத்து வேளாளர்களுக்கும் சுத்த சோழிய வேளாளர்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. மந்தை சோழிய வேளாளர்கள் என்பவர்கள் அவர்களுக்கென தனி சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்கள்,அவர்கள் சுத்த சோழியருடன் எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை. கொடிக்கால் வேளாளர்கள் சோழிய வேளாளர்கள் கிடையாது. வெற்றிலை...
Comments
Post a Comment